சனி, 14 மார்ச், 2009

சுவிசர்லாந்தில் ஒரு சுவையான அனுபவம்....!!!


சுவிசர்லாந்தில் ஒரு சுவையான அனுபவம்....!!!


நான் ஹோட்டல் நிர்வாக படிப்பு முடித்துவிட்டு சென்னையில
ஆறு வருடமா வேலை பார்த்து வந்தேன் ....!!!!ரொம்ப நாளா குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தேன் .!!! ஒரு நாள் என் நண்பன் மூலமா அமெரிக்காவில் வேலை பார்க்க ஒரு நேர்முக தேர்வுக்கு வாய்ப்பு கிடைத்தது ... !!! வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டேன் ...

சில மாதம் கழித்து அமெரிக்கா விசாவும் கிடைத்து விட்டது .நான் இது நாள் வரைக்கும் வெளி நாடு சென்றதில்லை ....இது முதன் முறையாக செல்கிறேன் ...எனக்கு டிக்கெட் சுவிசர்லாந்து போயி அப்புறம் அங்கிருத்து அமெரிக்காவுக்கு போகணும் ..

இரவு இரண்டு மணிக்கு சென்னையில் ஏறி மதியம் 2:30 மணிக்கு சுவிசர்லாந்து போயிட்டேன் ... இது முதல் முறை என்பதால் எனக்கு சற்று பயமாகவே இருந்தது.. ! அங்கிருந்து எனக்கு 4:30 மணிக்கு எனக்கு அடுத்த விமானம், அதாவது அங்கிருந்து அமெரிக்கா போவதற்கு இன்னும் எனக்கு இரண்டு மணிநேரம் தான் டைம் இருக்கு ...!!!!

அடுத்த விமானம் எப்போது எந்த இடத்திலிருந்து புறப்ப்படு முன்னு தெரியாது ... அதனால அங்கிருக்கிற உதவி மையத்தில் போயி கேட்டேன் ... அதுக்கு அங்க உள்ள ஒரு பெண் நீங்க போக கூடிய விமானம் இன்னும் வரலே ... அதனால நீங்க வெயிட் பண்ணுங்க .. என்ற பதில் வந்தது ... மணி மாலை 3:30 ஆகிவிட்டது மீண்டும் போயி அதே பெண்ணிடம் கேட்டேன் ... நான் போக கூடிய விமானம் வந்துவிட்டதா என்று .... அதற்கு இன்னும் வரவில்லை என்ற அதே பதில் தான் ..!!!


ஒரு முப்பது நிமிடம் கழித்து மீண்டும் பொய் கேட்டேன் ... மணி 4:30ஆகிவிட்டது இது நான்காவது முறை... மீண்டும் அதே பதில்.போயி வெயிட் பண்ணுங்க ..... என்கிற அதே வார்த்தை .. 4:30 மணிக்கு எனக்கு flight ஆனா மணி இப்போ 4:10 இன்னும் 20 நிமிடங்கள் மட்டுமே இருக்கு... திரும்பவும் போயி confirm பண்ணிக்கிவோம் என்று நினைத்து என்னுடைய கடிகாரத்தை அந்த பெண்ணிடம் காட்டி இன்னும் எனக்கு 20 நிமிடம்தான் இருக்கிறது என்றேன் ...நீங்கள் சரியான தகவலை தரவில்லை என்றால் நான் எனது விமானத்தை தவற விட்டு விடுவேன் .. தயவு செய்து சரியான பதிலை தருமாறு கேட்டேன் ..

அதற்கு அந்த பெண் சற்றே கோபம் தெரிந்த முகத்துடன் விமான நிலையத்தில் உள்ள கடிகாரத்தை காட்டி இப்போ மணி 12:30 தான்
ஆகிறது .... ஆனா உங்களுக்கு விமானம் 4:30 மணிக்கு தான் எனவே இன்னும் 4 மணி நேரம் இருக்கு ... தயவு செய்து உங்கள் கடிகாரத்தின் மணியை மாற்றி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்றதும் அப்போது தான் புரிந்தது இந்தியாவுக்கும் இடையே நேரம் வித்தியாசம் இருக்கும் என்பது ....சற்றே சுற்றும் முற்றும் உள்ளவர்களை பார்த்து ஒரு அசட்டு சிரிப்புடன் தலையை குனிந்தவாறு அந்த இடத்திலிருந்து மெல்ல நகர்ந்தேன் ... எனவே இனி புதிதாக செல்பவர்கள் என்னை போல் அல்லாமல் புத்திசாலி தனமாக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் .....

(மேலே நடந்தது உரையாடல் எல்லாம் ஆங்கிலத்தில் தான் நடந்தது ....ஓகே வா ..!!அங்கே யாரும் தமிழ் பேசமாட்டங்க.....)

அரட்டை அகிலன் .....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக