சனி, 7 மார்ச், 2009

பணம் இருந்தும் மனம் இல்லை

பள்ளிப் பருவத்தில்

அழுது அடம் பிடித்து

காசு கேட்ப்பேன் அப்பாவிடம்

பட்டாசு வாங்க .....!!!!

தீபாவளி போனஸ் ஆக

இரண்டு அடியும்

வங்கிக்க் கொள்வேன் ...!!!

மேல்முறையீடு அம்மாவிடம்

என் அழுத முகத்தை பார்த்து

ஐந்து ரூபாய்

அப்பாவிற்கு தெரியாமல் ....

ஏழு தலைமுறையே

கடந்த மாதிரி

ஏகப்பட்ட சந்தோசம் ...

அன்று என் கையில்

பணம் இல்லை

இன்று என் கையில்

பணம் இருந்தும்

பட்டாசு வாங்க மனம் இல்லை ...

ஏனென்றால்

"பணத்தின் அருமை உனக்கு இப்பொது தெரியாது

நீ சம்பாதித்தால் தான் தெரியும்"....!!!!!

இன்றும் என் காதில்

என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும்

என் சிக்கனத்தின் சிகரமான

அப்பாவின் தாரக மந்திரம் ............

அன்புடன்

அரட்டை அகிலன்

5 கருத்துகள்:

  1. உங்க புல்லையாண்டானும் இப்படி ஒன்னு எழுதுவார்

    பதிலளிநீக்கு
  2. /நட்புடன் ஜமால் சொன்னது…

    உங்க புல்லையாண்டானும் இப்படி ஒன்னு எழுதுவார்
    /

    ரிப்பீட்டு...:)

    பதிலளிநீக்கு
  3. அதத்தான் முதுமையில் செல்வம்ன்னு சொல்றாங்க போல

    அவ்வளவு முதுமையில்லை தான் உங்களுக்கு

    ஆனாலும் அந்த வரிகளின் ஆழம் பாருங்க

    பதிலளிநீக்கு