மண்டியிட்டு
நகர்ந்து போய்
அம்மாவின் கை பிடித்து
பசி என்று அழுதேன் அன்று .. ...!!
என் மொழி புரிந்து கொண்டு
அவள் விரல்களில் அகப்பட்டு
நசிந்து போன சுடுசோறும்
வெது வெதுப்பான வெந்நீரும்
அம்மாவின் கரங்களில் .....
உதடுகளை விலக்கி
சோறுட்டும் போது
என் அழுகையைக் கண்டு
அந்த நிலவை காட்டி பசி போக்குவாள்...
நகர்ந்து போய்
அம்மாவின் கை பிடித்து
பசி என்று அழுதேன் அன்று .. ...!!
என் மொழி புரிந்து கொண்டு
அவள் விரல்களில் அகப்பட்டு
நசிந்து போன சுடுசோறும்
வெது வெதுப்பான வெந்நீரும்
அம்மாவின் கரங்களில் .....
உதடுகளை விலக்கி
சோறுட்டும் போது
என் அழுகையைக் கண்டு
அந்த நிலவை காட்டி பசி போக்குவாள்...
இப்போது
அந்த நிலாவும் இருக்கு ...!
அம்மாவும் இருக்கு ... !!
" நிலாச்சோறு குழந்தை" தான் இல்லை ...
அம்மாவும் இருக்கு ... !!
" நிலாச்சோறு குழந்தை" தான் இல்லை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக